search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீஸ் சூப்பிரண்டு"

    • நாற்காலியில் உட்கார வைத்து போலீசார் அழைத்துச் சென்றனர்
    • வாரத்தில் புதன் கிழமை தோறும் பொது மக்களிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன.

    நாகர்கோவில்:

    வாரத்தில் புதன் கிழமை தோறும் பொது மக்களிடம் மனுக்கள் பெற்று குறைகளை தீர்த்து வைக்க போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு அறிவுறுத்தி உள்ளார். அதன்படி அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன.

    குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் நாகர்கோவிலில் உள்ள அலுவல கத்தில் வைத்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்று வருகிறார். அதன்படி இன்று (புதன்கிழமை) அவர் பொது மக்களை நேரடி யாக சந்தித்து மனுக்களை பெற்றார்.

    ஏராளமானோர் தங்க ளின் புகார் மனுக்களை கொடுக்க வந்த னர். மாற்றுத் திறனாளி ஓருவரும் இன்று மனு கொடுக்க வந்தார். அவரை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் அதிவிரைவுபடை போலீசார் நாற்காலியில் அமரவைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் அழைத்துச் சென்றனர். தொடர்ந்து மாற்றுத்திறனாளியான அவர், போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத்திடம் மனு கொடுத்துச் சென்றார்.

    • வெடிகுண்டு வீசி தொழில் அதிபரை கொல்ல முயன்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
    • போலீஸ் சூப்பிரண்டு மனோகர் சம்பவ இடம் வந்து நேரில் விசாரணை நடத்தினார்.

    விருதுநகர்

    விருதுநகர் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள செவல்பட்டியை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 29). இவர் அதே பகுதியில் கார்மெண்ட்ஸ் நடத்தி வருகிறார். இவர் தினமும் இரவில் அலுவலகத்திலேயே தூங்குவது வழக்கம்.

    சம்பவத்தன்று இரவு விக்னேஷ் கார்மெண்ட்ஸ் வாசலில் கட்டிலில் தூங்கி னார். அப்போது முகமூடி அணிந்த மர்ம நபர்கள் கார்மெண்ட்சுக்குள் நுழைய முயன்றனர். சத்தம் கேட்டு எழுந்த விக்னேஷ் யார் என்று பார்ப்பதற்குள் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பினர். மறுநாள் இரவும் விக்னேஷ் கார்மெண்ட்ஸ் வெளியே தூங்கினார்.

    நள்ளிரவு அங்கு வந்த முகமூடி நபர்கள் 2 பேர் தாங்கள் வைத்திருந்த மண்எண்ணை குண்டை எடுத்து வீசி விட்டு தப்பினர். இதில் கட்டிலில் பட்டு அவை வெடித்தன. இதில் அதிர்ஷ்வசமாக விக்னேஷ் காயமின்றி உயிர் தப்பினார். ஆனால் கட்டில் எரிந்து நாசமானது.

    இதுகுறித்த புகாரின்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் சம்பவ இடம் வந்து நேரில் விசாரணை நடத்தினார்.

    சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து தொழில் போட்டி காரண மாக விக்னேசை கொல்ல முயற்சி நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் குப்பைகளை எடுத்துச் சென்றனர்.
    • அதிரடி படையினருடன் இணைந்து போலீஸ் சூப்பிரண்டு குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டார்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் போலீஸ் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

    ஆய்வின் போது போலீஸ் நிலைய வளாகத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுரைகளை வழங்கி வருகிறார். இந்தநிலையில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு அலுவலகத்தில் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமையில் தூய்மை பணி நடந்தது.அதிரடி படை யினருடன் இணைந்து வளா கத்தில் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டார்.

    அப்போது அந்த பகுதியில் கிடந்த குப்பைகளை போலீ சாருடன் இணைந்து மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் அகற்றி னார். பின்னர் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு அங்கிருந்த குப்பைகளை எடுத்துச் சென்றனர்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவல கத்தில் ஆங்காங்கே பூந்தொட்டிகளை வைத்து பராமரிக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கூறினார்.

    • வருகிற 17-ந்தேதி முதல் கன்னியாகுமரியில் சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் தொடங்க இருக்கிறது
    • ஒரு லாட்ஜில் சமீபத்தில் ஒரு கும்பல் அறை எடுத்து தங்கி இருந்து பணம் இரட்டிப்பு மோசடியில் ஈடுபட்டது உங்கள் அனைவருக்கும் தெரியும்

    கன்னியாகுமரி, நவ.9-

    கன்னியாகுமரியில் உள்ள ஒரு லாட்ஜில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையை சேர்ந்த ஒரு கும்பல் அறை எடுத்து தங்கி இருந்து பலரிடம் பணம் இரட்டிப்பு மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து கன்னியாகுமரியில் உள்ள லாட்ஜ்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் வருகிற 17-ந்தேதி முதல் கன்னியாகுமரியில் சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் தொடங்க இருக்கிறது. இதைத் தொடர்ந்து கன்னியாகுமரியில் உள்ள லாட்ஜ்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுப்பது குறித்து ஆலோசிப்பதற்காக லாட்ஜ் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்களின் ஆலோசனைக் கூட்டம் கன்னியாகுமரியில் உள்ள சிங்கார் இன்டர்நேஷனல் ஓட்டலில் நேற்று இரவு நடந்தது.

    கூட்டத்துக்கு குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

    கன்னியாகுமரியில் 100-க்கும் மேற்பட்ட லாட்ஜ்கள் உள்ளன. இதில் ஒரு லாட்ஜில் சமீபத்தில் ஒரு கும்பல் அறை எடுத்து தங்கி இருந்து பணம் இரட்டிப்பு மோசடியில் ஈடுபட்டது உங்கள் அனைவருக்கும் தெரியும். எனவே இனி வரும் காலங்களில் லாட்ஜ்களில் அறை எடுக்க வருபவர்கள் பற்றி முழுமையாக அவர்களை பற்றிய விவரங்களை தெரிந்த பிறகு அறை கொடுக்க வேண்டும். அவர்கள் கொடுக்கும் செல்போன் எண்கள் உண்மையிலேயே அவர்களுடையதுதானா? என்று பரிசோதித்துப் பார்க்க வேண்டும். ஆதார்அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்ற அடையாள அட்டைகள் இல்லாமல் எந்த ஒரு நபருக்கும் லாட்ஜ்களில் தங்குவதற்கு அறை கொடுக்கக் கூடாது.

    சந்தேகப்படும் படியான நபர்கள் யாராவது லாட்ஜூகளில் தங்கி இருந்தால் உடனடியாக போலீசுக்கு தெரியப்படுத்த வேண்டும். அதேபோல நீண்ட நாட்களாக தொடர்ந்து அதே லாட்ஜில் யாராவது தங்கி இருந்தால் அவர்களைப் பற்றிய விவரங்களையும் உடனடியாக போலீசுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

    ஒரு சில லாட்ஜூகளில் நிறைய சமூக விரோத செயல்கள் நடந்து கொண்டிருப்பதாக போலீசுக்கு தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். சபரிமலை சீசன் தொடங்குவதற்கு முன் அனைத்து லாட்ஜ்களிலும் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா கட்டாயம் பொருத்தப்பட வேண்டும்.

    இது ஒன்றுதான் குற்றங்களை தடுக்க நிரந்தர தீர்வாகும். எனவே கண்காணிப்பு கேமரா இல்லாத லாட்ஜ்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குறைந்தபட்சம் 90 நாட்களாவது கண்காணிப்பு கேமராவில் பதிவுகள் ஸ்டோர் ஆகி இருக்க வேண்டும். அதேபோல ஒவ்வொரு லாட்ஜூகளிலும் காவலாளிகளை நியமிக்க வேண்டும்.

    இவ்வாறு போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பேசினார். இந்தக் கூட்டத்தில் கன்னியாகுமரி போலீஸ் டி.எஸ்.பி. ராஜா, கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தகுமாரி, கன்னியாகுமரி லாட்ஜ் உரிமையாளர்கள், சங்க செயலாளர் வக்கீல் ராஜேஷ், துணைத் தலைவர் தாமஸ், பொருளாளர் ஜாண் கென்னடி, மற்றும் 100-க்கும் மேற்பட்ட லாட்ஜ் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்கள் கலந்து கொண்டனர்.

    • சப்- இன்ஸ்பெக்டர் அந்த பெண்ணை தாக்க முயல்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது
    • சப்- இன்ஸ்பெக்டர் முரளிதரன் நாகர்கோவில் நேசமணி நகர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டு உள்ளார்.

    நாகர்கோவில் :

    மண்டைக்காடு சப்- இன்ஸ்பெக்டராக பணி புரிந்து வந்தவர் முரளிதரன்.

    இவர் நடுவூர் கரையில் புகார் மனு ஒன்று தொடர்பாக விசாரணைக்கு சென்றிருந்தார். அப்போது பெண் ஒருவரிடம் விசாரணை மேற்கொண்டார். விசாரணைக்கு சென்ற பெண் சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரனிடம் அத்துமீறி பேசியதாக தெரிகிறது.

    இதையடுத்து சப்- இன்ஸ்பெக்டர் அந்த பெண்ணை தாக்க முயல்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது.

    இந்த நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன் திடீரென இடமாற்றம் செய் யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பிறப்பித்துள்ளார்.

    மண்டைக்காடு போலீஸ் நிலையத்திலிருந்து சப்- இன்ஸ்பெக்டர் முரளிதரன் நாகர்கோவில் நேசமணி நகர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டு உள்ளார்.

    • செல்போன் திருடர்கள் கைது செய்யப்பட்டு, ஏராளமான செல்போன்கள் மீட்கப்பட்டன
    • வழிப்போக்கு நபரிடமோ, தெரியாத நபரிடமோ செல்போன்களை கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என்றார்.

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டத்தில் அடிக்கடி செல்போன்கள் திருட்டு போவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன.

    இதனை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிர ண்டு ஹரிகிரண் பிரசாத் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார். அவரது உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இதன் பலனாக செல்போன் திருடர்கள் கைது செய்யப்பட்டு, ஏராளமான செல்போன்கள் மீட்கப்பட்டன. அவை உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    இந்த சூழலில் தக்கலை பகுதியில் மாயமான செல்போன்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதில் 211 செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளன.

    அவற்றை உரியவர்க ளிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி தக்கலையில் இன்று நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், மீட்கப்பட்ட செல்போன்களை உரிய வர்களிடம் ஒப்படைத்தார்.

    துணை சூப்பிரண்டு கணேசன், இன்ஸ்பெக்டர்கள் செந்தில்வேல் முருகன், எழிலரசு ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட னர். பின்னர் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கூறுகையில், வழிப்போக்கு நபரிடமோ, தெரியாத நபரிடமோ செல்போன்களை கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என்றார்.

    • கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தகவல்
    • 2 முறைக்கு மேல் விபத்து ஏற்படுத்தியவர்கள் கண்டறியப்படும்

    கோவை:

    கோவையில் மாவட்டத்தில் பஸ் உள்ளிட்ட பொது இடங்களில் மக்கள் தவறவிட்ட சுமார் 106 செல்போன்கள் மீட்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இன்று நடந்த நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன், செல்போனை உரியவர்களிடம் வழங்கினார். இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கோவை மாவட்டத்தில் கடந்த 4 மாதங்களில் பொதுமக்கள் தவறவிட்ட ரூ.52 லட்சம் மதிப்பிளான 350 சொல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடந்த 4 மாதங்களில் போக்சோ வழக்குகளில் 149 வழக்குகளுக்கு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது, 9 பேருக்கு தண்டனை கிடைத்துள்ளது.

    வழக்கு விரைந்து முடித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தர தனிப்பிரிவு செயல்பட்டு வருகிறது. பிராஜெக்ட் பள்ளிக்கூடம் திட்டம் மூலம் மாவட்ட போலீசார் 28 நாட்களில் 36 ஆயிரம் பள்ளி குழந்தைகளை சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளோம், அதில் 12 ஆயிரம் பேர் 10 வயதிற்கும் குறைவான குழந்தைகள். இந்த நடவடிக்கையால் குழந்தைகளுக்கு போலீீசார் மீது உள்ள அச்சம் குறைந்துள்ளது.

    கோவையில் குட்கா விற்பனை தொடர்பாக 332 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 347 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 5 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது, 125 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    அதே போல கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 126 வழக்குகள், 250 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளார். 4 பேரை குண்டர் சட்டத்தில் அடைக்க பரிந்துரை செய்துள்ளோம்.

    மேலும் மாவட்டத்தில் சந்தேக மரணமாக பதிவாகும் வழக்குகளில் உறவினர்களுக்கு இறப்பு சான்றிதழ் பெற சிக்கல் இருந்தது, அவ்வாறு இருந்த 140 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளது.

    கோவை மாவட்டத்தில் கடந்த 2019-2022 வரையில் நடந்த சாலை விபத்து 10 சதவீதமாக குறைந்துள்ளது. இருப்பினும் இரண்டு முறைக்கு மேல் விபத்து ஏற்படுத்தி 740 பேர் கண்டறியப்பட்டு, அதில் 500 வாகன ஓட்டிகளின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய வட்டார போக்குவரத்து துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மீதம் உள்ளவர்கள் உரிமங்க ளை ரத்து செய்ய பரிந்து ரைக்கப்படும். மாண வர்களின் எதிர்கால வாழ்க்கையை கருத்தில் கொண்டே மாவட்டத்தில் கஞ்சா குட்கா விற்ப னையை தடுக்க கடும் நடவடி க்கைகளை எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்க காவல் உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது.
    • மேலும் ஏதாவது சந்தேகம் இருப்பின் 9655220100 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறை காவலர் மற்றும் தீயணைப்பு துறையில் காலியாக உள்ள 3,552 இடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    தேர்வுக்கான விண்ணப்பங்களை தகுதியுள்ள தேர்வர்கள் இணையதளம் மூலம் அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அடுத்த மாதம் 15-ந் தேதிக்குள் www.tnusrb.tn.gov.in என்ற இணையதள முகவரி மூலமாக மட்டுமே அனுப்ப வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து அனுப்ப உதவிடும் வகையில் ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் காவல் உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    மேலும் ஏதாவது சந்தேகம் இருப்பின் 9655220100 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • கலெக்டர்-போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தனர்
    • ஜூன் 26-ந் தேதி உலக போதை ஒழிப்பு விழிப்புணர்வு தினம்

    கன்னியாகுமரி:

    ஆண்டுதோறும் ஜூன் மாதம் 26-ந்தேதி உலக போதை ஒழிப்பு விழிப்புணர்வு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல இந்த ஆண்டு உலக போதை ஒழிப்பு விழிப்புணர்வு தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி மத்திய அரசின் திட்டமான போதைப்பொருள் இல்லாத இந்தியா திட்டம், குமரி மாவட்ட சமூக நலத்துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் சமூகத் தொண்டு நிறுவனங்களான திருப்புமுனை போதை நோய் நலப்பணி, போதை நோய் பணிக்குழு, புது வாழ்வு மையம், நியூ பாரத் டிரஸ்ட், ஏ.எம். கே. ஆகியவை இணைந்து குமரி மாவட்டத்தில் 21 இடங்களில் இருந்து நாகர்கோவிலுக்கு போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஜோதி ஓட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி கன்னியாகுமரி யில் விழிப்புணர்வு ஜோதி ஓட்டத்தின் தொடக்க விழா காந்தி நினைவு மண்டபம் முன்பு இன்று காலை நடந்தது. குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் பங்கேற்று "மாணவரே, வேண்டாமே...போதை!" என்ற விழிப்புணர்வு துண்டுப் பிரசுரத்தை வெளியிட அதனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரன் பிரசாத் பெற்றுக்கொண்டார்.

    பின்னர் அவர்கள், போதை ஒழிப்பு விழிப்பு ணர்வு ஜோதியை ஏற்றி தொடர் ஓட்ட வீரர்களிடம் வழங்கினர். ஜோதி ஓட்டத்தை கொடி யசைத்து தொடங்கி வைத்தனர்.

    நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அதிகாரி சரோஜினி, கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், செயல் அலுவலர் ஜீவநாதன், கன்னியாகுமரி போலீஸ் டி.எஸ்.பி. ராஜா, திருப்புமுனை போதை நோய் நலப்பணி இயக்குனர் அருட்பணியாளர் நெல்சன், ஜோதி ஓட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயசிறில், நாகர்கோவில் அரசு போக்குவரத்து கழக இயக்கம் மற்றும் ஆய்வு பிரிவு துணை பொது மேலாளர் ஜெரோலின் லிஸ்பன்சிங், கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி துணைத்தலைவர்ஜெனஸ் மைக்கேல், வார்டு கவுன்சிலர்ஆனிரோஸ், முன்னாள் வார்டு கவுன்சிலர் தாமஸ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த ஜோதி ஓட்டத்தில் குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரன் பிரசாத் ஆகியோர் தொடர் ஓட்ட வீரர்களுடன் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் ஓடினார்கள். கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டபம் முன்பு இருந்து புறப்பட்ட இந்த போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஜோதி ஓட்டம் விவேகானந்தபுரம், கொட்டாரம், பொற்றையடி, ஈத்தங்காடு, வழுக்கம்பாறை, சுசீந்திரம், இடலாக்குடி, கோட்டாறு, மீனாட்சிபுரம் மணிமேடை சந்திப்பு வழியாக நாகர்கோவிலில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கத்தை சென்றடைந்தது. அங்கு உலக போதை விழிப்புணர்வு தினம் கொண்டாடப்பட்டது.

    குளச்சல் காணிக்கை அன்னை சபை மற்றும் புது வாழ்வு இல்லம் சார்பில் போதை விழிப்புணர்வு ஜோதி ஓட்டம் குளச்சல் பீச் சந்திப்பில் தொடங்கியது.குளச்சல் பங்குத்தந்தை டையனேசியஸ் லாரன்ஸ் சிறப்புரை ஆற்றினார். வட்டார முதன்மை அருட் பணியாளர் பிரான்சிஸ் டி.சேல்ஸ் ஜோதி ஏற்றி வாழ்த்துரை வழங்கினார். குளச்சல் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ஜுவா, இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ் ஆகியோர் ஜோதி ஓட்டத்தை துவக்கி வைத்தனர்.

    இதில் மாவட்ட ஊராட்சி கள் உதவி இயக்கு னர் அலுவலக பி.டி.ஓ. விஜயகுமார் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.ஜோதியை குளச்சல் பங்கு இளைஞர்கள் பெற்றுக்கொண்டு மண்டை க்காடு, மணவாளக்குறிச்சி, ராஜாக்கமங்கலம் வழி யாக நாகர்கோவில் சென்றடைந்தனர்.அங்கு அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடக்கும் போதை விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    குளச்சலில் தொடங்கிய ஜோதி ஓட்டம் ஏற்பாடுகளை காணிக்கை அன்னை சபை தலைமை அருட்சகோதரி அன்பரசி செய்திருந்தார்.

    குமரி மாவட்டம் முழுவதும் 21 இடங்களில் இருந்து புறப்பட்ட போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கை வந்தடைந்தது.

    • அனுமதிபெறாத வாகனங்கள் பள்ளியின் பயன்பாட்டுக்கு பயன்படுத்துவது கண்டறிந்தால் பறிமுதல்: விழுப்புரம் கலெக்டர் எச்சரிக்கை விடுத்தள்ளார்
    • போக்குவரத்துத்துறையின் மூலம் ஆய்வு செய்யப்பட்டு, அனுமதிக்கப்பட்ட வாக னங்கள் மட்டுமே பள்ளி பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பெருந்திட்ட வளாக மைதானத்தில், வட்டார போக்குவரத்துத் துறையின் மூலம், நடப்பு கல்வியாண்டிற்கான பள்ளிகள் திறந்ததை யொட்டி, பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யும் பணி நடைபெற்றது.

    இப்பணியினை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு .ஸ்ரீநாதா முன்னிலை யில், மாவட்ட கலெக்ட–ர்மோகன்அவர்கள் தலைமை–யேற்று பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணியினை தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசியதாவது:-

    தமிழ்நாடு முதல்- அமைச்சர் உத்தரவிற்கி ணங்க நடப்பு கல்வியாண்டிற்கு பள்ளிகள் திறக்கப்பட்டதையொட்டி, பள்ளி வாகனங்கள் முழுமை யாக பரிசோதனை செய்து இயக்கிடும் வகையில் வட்டார போக்கு வரத்துத்துறையின் மூலம் இப்பணியினை மேற்கொள்ள உத்தரவிட்டு அதனடிப்படையில் மாவட்டத்தில் 187 பள்ளி வாகனங்கள் பயன்படு–த்தப்பட்டு வருவதை பரிசோத னைக்கு உட்படு–த்தப்ப–ட்டுள்ளன. அதில் 147 வாகனங்கள் முழுமையாக ஆய்வு செய்து வாகனங்கள் இயக்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 15 வாகனங்கள் பழுதடைந் துள்ளதை கண்டறிந்து அதை சரிசெய்து மீண்டும் வாகனத்தை கொண்டு அனுமதி பெற்றுச்செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள வாகனங்கள் நாளை ஆய்வுக்கு கொண்டு வர உள்ளார்கள். பள்ளி வாகனங்களை பொறுத்த வரை வட்டார போக்குவரத்துத்துறையின் மூலம் ஆய்வு செய்யப்பட்டு, அனுமதிக்கப்பட்ட வாக னங்கள் மட்டுமே பள்ளி பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும். அனுமதிபெறாத வாக னங்கள் பள்ளியின் பயன் பாட்டிற்கு பயன்படுத்து வது கண்டறிந்தால் வாக னங்களை பறிமுதல் செய்வ துடன், வாகன ஓட்டுநர் உரிமமும்ரத்து செய்ய–ப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

    • 25-ந் தேதி சப்-இன்ஸ்பெக்டர் தேர்விற்கு குறிப்பிட்ட நேரத்தில் வராவிட்டால் தேர்வு மையத்தில் அனுமதி இல்லை என போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தியுள்ளார்.
    • தகுதி தேர்வில் வெற்றி பெற்றால் தான் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் பங்கு பெற முடியும்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக சீருடை பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கான தேர்வுகள் வருகிற 25-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வு எழுதுவதற்கு தமிழகம் முழுவதும் 2 லட்சத்து 22 ஆயிரத்து 213 பேர் விண்ணப்பித்து உள்ளனர். இதில் சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் 4,160 பேர் விண்ணப்பித்து உள்ளனர். இந்த தேர்வு எழுதுவதற்காக சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 5 இடங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டு உள்ளது.

    ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் ஒரு துணை போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பில் இருப்பார். மேலும் 20 பேருக்கு ஒரு போலீஸ்காரர் கண்காணிப்பாளராக இருப்பார்.தேர்வு மையத்திற்கு வரும் தேர்வர்கள் கருப்பு நிற பால் பாயிண்ட் பேனா மட்டும் கொண்டு வரவேண்டும். தேர்வு நடைபெறும் இடத்திற்கு 8.30 மணிக்கு வர வேண்டும். 9.50 மணிக்கு மேல் யாருக்கும் தேர்வு மையத்திற்குள் அனுமதி கிடையாது. மேலும் தேர்வு எழுதுபவர்கள் ஹால் டிக்கெட்டை ஆன்லைன் மூலமாக பதிவிறக்கம் செய்யலாம். ஹால் டிக்கெட்டில் தவறுகள் ஏதும் இருந்தால் பதட்டப்படாமல் தேர்வு எழுதுவதற்காக விண்ணப்பித்தபோது கொடுத்த புகைப்படத்துடன் ஏதாவது ஒரு அடையாள அட்டையை கொண்டு வந்தால் போதும் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

    மேலும் வழக்கமாக சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு பொது அறிவு தேர்வுக்கு 70 மதிப்பெண்ணும், உடல் தகுதி தேர்வுக்கு 15 மதிப்பெண்ணும், சான்றிதழ்களுக்கு 5 மதிப்பெண்ணும், நேர்முகத் தேர்வுக்கு 10 மதிப்பெண்ணும் வழங்கப்படும்.

    இந்த முறை புதிதாக இந்த மதிப்பெண் தவிர தமிழ் தகுதித் தேர்வு தனியாக நடத்தப்படும்.இந்த தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே சப்- இன்ஸ்பெக்டர் தேர்வில் கலந்துகொள்ள தகுதி உடையோர் ஆவார்கள். இதன்படி 25-ந்் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரை பொதுஅறிவுத் தேர்வும், மதியம் 3.30 மணி முதல் 5.10 மணி வரை தமிழ் தகுதி தேர்வும் நடைபெறும்.

    சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தமிழ் தகுதி தேர்வுக்கு தங்களை தயார் படுத்திக்கொள்ள வேண்டும். அதில் வெற்றி பெற்றால் தான் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் பங்கு பெற முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கந்துவட்டி புகார்களை தெரிவிக்க தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • இந்த தகவலை போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் படி கந்துவட்டி குறித்த புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், கந்து வட்டி வழக்குகளை கையாளவும் காவல்துறை இயக்குநர் சைேலந்திரபாபு அறிவுரையின்படி ஆபரேசன் கந்துவட்டி தொடங்கப்பட்டு உள்ளது.

    இதன்படி அதிக வட்டி வசூல் தடை சட்டம் 2003 -ன் அடிப்படையில் உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் "ஆபரேசன் கந்துவட்டி" என்ற பெயரில் அதிக வட்டிக்கு கடன் வாங்கி கந்துவட்டி கும்பல்களால் மிரட்டப்படுபவர்கள் மற்றும் கந்துவட்டி தொழில் செய்பவர்கள் தொடர்பான புகார்களை சம்பந்தப்பட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலக தொலைபேசி எண்களிலோ மற்றும் மாவட்ட காவல் அலுவலகத்திலோ நேரடியாகவோ அல்லது தொலைபேசி மூலமாகவோ புகார் தெரிவிக்கலாம்.

    மேற்கண்ட புகார்கள் தொடர்பான விசாரணை உடனுக்குடன் நடத்தப்பட்டு உடனடி யாக சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக் கப்படும். மேலும் தகவல் கொடுப்பவர்கள் பற்றிய விவரங்கள் மிகவும் ரகசியமாக வைத்துக் கொள்ளப்படும்.

    இதற்காக ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆபரேசன் கந்து வட்டி குறித்து புகார் தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண்கள் காவல் கட்டுப்பாட்டு அறை 04567-230904,04567-230759, ஹலோ போலீஸ் 83000 31100,மாவட்ட தனிப்பரிவு 04567 290113 மற்றும் 94981 01615 ஆகிய எண்களில் தெரிவிக்கலாம்.

    இதுதவிர மாவட்டத்தில் உள்ள துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்களில் ராமநாத புரம் 94981 01616 என்ற எண்ணிலும், பரமக்குடிக்கு 94981 01617,கமுதிக்கு 94981 01618, ராமேசுவரத்திற்கு 94981 01619,கீழக்கரைக்கு 94981 01620, திருவாடானைக்கு 94981 01621, முதுகுளத்தூருக்கு 04567 290208 என்ற எண்களிலும் தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல் தெரிவிக்கலாம். 

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×